Monday, November 7, 2011

                சமீப காலத்தில் தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் விஷயம் "கூடங்குளம்". தொடர் மின் வெட்டு மற்றும் பெருகி வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு அணு மின் சக்தி அவசியம் என்று தோன்றுகிறது. ஆனால் கடலோரம் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம் "புருஷிமா" போல சுனாமியோ , புயலோ அல்லது நிலா நடுக்கமா வந்தால் தாங்குமா என்ற கூடங்குளம் மக்களின் அச்சம் நியாயமானதே.

                 ஜெர்மனி போன்ற வளர்ந்தே நாடே, ஜப்பான் புருஷிமா நிகழ்வுக்கு பின் 2020 க்குள் தன் எல்லா அணு மின் நிலையங்களையும் மூடப்போவதாக அறிவித்து இருப்பது அச்சத்தை அதிகரிக்கிறது. (அதே சமயத்தில் இந்தியா அணு மின் உற்பத்தியை 2020க்குள் நான்கு மடங்கு உயர்தியாக வேண்டும் என்று பாரத பிரதமர், அதுவும் ஜெர்மனி அதிபர் முன் பேசி இருப்பது வேதனை)

                எப்படியானாலும் அணு மின் நிலையங்கள் எப்போதும் நம் தலைக்கு மேல் தொங்கும் கத்திதான். அரசு இந்த அணு மின் நிலையங்களை கை விட்டு வேறு சூரிய சக்தியோ, காற்றாலை மின்னுற்பதியோ ஊக்குவிக்க வேண்டும். அது இப்போதைக்கு சாத்தியமில்லை. அதுவும் இப்போதிருக்கும் மத்திய அரசு இருக்கும் பிரச்சினைகளை சாமளிக்கவே திணறி கொண்டிருக்கும் போது இது போன்று தொலை நோக்கு திட்டங்களை எதிர் பார்ப்பது முட்டாள் தனம்.

              அப்படி என்றால் என்ன செய்வது? இத்தனை கோடி செலவில் உருவான திட்டத்தை கை விடுவது சாத்தியமில்லை. இதை அப்படியே ஏற்று கொள்வதை தவிர வேறு வழி இல்லை. எதிர் காலத்தில் மேலும் அணு மின் சக்தியை நாடாமல் வழக்கத்தில் அல்லாத எரிசக்தி மூலங்களை பயன் பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம். அப்துல் கலாமே சொல்லிவிட்டாரே இந்த அணு மின் நிலையம் பாதுகாப்பானதென்று. பிறகென்ன!!!!!!

              ஆனால் கலாம் ஒன்றும் கடவுள் இல்லை. இயற்கையின் சீற்றத்துக்கு முன்  மனித சக்தி எப்போதும் தோற்றுத்தான் போயிருக்கிறது.
               

No comments:

Post a Comment