Monday, November 7, 2011

குறளும் விளக்கமும்


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது -   குறள்


         இந்த குறளை நான் ஏற்கனவே பலமுறை படித்திருந்தாலும் சமீபத்திய நிலவுகள் இதற்கான நல்ல விளக்கமாக இருப்பதும், வள்ளுவனின் இந்த குறள் 2000 வருடத்திற்கு பிறகும்கூட கொஞ்சம் பிறழாமல் நடப்பாகுவது வியப்பே.

          இந்த குறளுக்கான விளக்கம் இதுதான், இன்னார்க்கு இன்னது வாய்க்க வேண்டும் என்று இறைவன் வகுத்து கொடுத்திருக்கும் வழியில் அல்லாமல் அதை காட்டிலும் அதிகம் ஈட்டினாலும் அதனை அனுபவிக்க முடியாது.

          இதற்கு வாழும் எடுத்துக்காட்டாய் நம் முன்னால் முதல்வரை சொல்லலாம். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவரை ஐந்து முறை அரியணை ஏற்றியது வரை இறைவன் வகுத்ததாக கொள்ளலாம். ஆசியாவிலேயே பணக்கார குடும்பமாக அவர் குடும்பம் மாறியது, இறைவன் வகுத்தல்ல, அவர்தாம் தொகுத்தது. ஆயினும் இந்த வயதான காலத்தில் தான் பெற்ற செல்வ மகள் ஐந்து மாதமாக சிறையில் வாடுவதும், ஐந்தாம் முறையாக ஜாமீன் நிராகரிக்க பட்டதும், வந்து போன ரம்ஜான், தீபாவளி, கார்த்திகை என எல்லா விழா நாட்களிலும் பெண்ணை சிறையில் வைத்துவிட்டு கொண்டாட முடியாமல் அன்னார் திண்டாடுவதுதான் "துய்த்தல் அரிது" என்றார் வள்ளுவர். 

No comments:

Post a Comment